சென்னையில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்துவிட்டு தப்பிய ஓடிய மர்ம நபர் - போலீசார் விசாரணை!

0 3101

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்துவிட்டு 16 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கே.கே.நகர் பாரதிதாசன் காலணியைச் சேர்ந்த 78 வயதான சீதாலட்சுமிக்கு,  துபாயில் இருக்கும் அவரது மகள் புவனேஷ்வரி வழக்கம்போல் போன் பண்ணவே, அழைப்பை எடுக்காததால், எதிர்வீட்டுக்காரரைச் சேர்ந்த ரித்தீஷை தொடர்புகொண்டு வீட்டில் பார்க்கச் சொல்லியுள்ளார்.

வீட்டுக் கதவு திறந்திருந்த நிலையில், உள்ளே படுக்கை அறையில் மூதாட்டி சடலமாக கிடந்துள்ளார். உடனடியாக ரித்தீஷ் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் நடத்திய விசாரணையில், மூதாட்டியின் கழுத்து, முகத்தில் காயங்கள் இருந்ததோடு, அவர் அணிந்திருந்த 2 செயின்கள், 8 வளையல்கள் என 16 சவரன் நகைகளும் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தலையணையை முகத்தில் அழுத்தி கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments